Sunday 3 December 2017

வந்து விடு கண்ணா!

வழிமேல் விழிவைத்து
    காத்திருந்தேன் என்பர்!
என் விழியோ --
    தொலைபேசி மீதே பாதிநேரமும்!
மீதி நேரம் கூட --
    உன் நினைவாய்த்தானே...!

வந்து விடு கண்ணா!

உனக்கே உனக்காய் --
   என்று தானே நானிருக்கிறேன்!
எனக்காய் நீயில்லை என்கிறாயே...!

வந்து விடு கண்ணா!

நீயில்லையேல் இனி --
    நானில்லை என்றாய்...!
உன் வார்த்தை நெருப்பாய் --
  மெழுகாய் உருக்கினாய்...!

உனக்காய் இன்று நான்
    உருகி நிற்கிறேன்...!
என்னை விட்டு நீ --
    விலகி நிற்பது மட்டும் ஏனடா...!

வேண்டாம் என்றிருந்தேன்!
    நீயே வேண்டும் --
என இரந்து நின்றாய்...!

ஊருக்கு பயந்தேன்!
   நீ உண்மையாய் இரு --
என்று அடக்கினாய்...!

இன்று நான் --
   உனக்காய் உண்மையாய்
காத்திருக்க --
 நீ ஏனோ இங்கில்லையே ...!!

சோதிக்கும் திட்டமா...?
    இல்லை --
என்மேல் இல்லை நாட்டமா...?

இனி --
     காத்திருப்பதே என் கடமையா...?
இல்லையடா!
    காத்திருப்பது கொடுமை...!

உனக்காய் இருக்கும்
    கடைசி நிமிடங்களாவது --
எனக்காய் தருவாயா?

No comments:

Post a Comment