Monday 5 June 2017

கண்டதும் காதல்!

கண்டதும் காதல் என்றனர் -
    பைத்தியம் என்றேன் நான்!
சிலநாள் உடனிருந்ததில் பிறந்தது என்றனர் -
    அது நட்பென்றேன் நான்!
பலநாள் சந்தித்து தெளிந்தேன் என்றனர் -
    இத்தனை காலம் உணராமல், இன்று மட்டும் ஏனென்றேன் நான்!
அத்தனையும் விளக்கத் தெரிந்திருந்த நான் -
    இன்று எனக்கே புரியாத புதிராய்!

என்னுள் தான் எத்தனை மாற்றங்கள் -
    பல ஏமாற்றங்களுக்குப் பின்னும்!

நானிருக்கும் நிலையென்ன?
    கொண்ட மாற்றம் தான் என்ன?
தனிமையில் யோசித்தேன் - 
    இன்று தனிமையை ரசிக்கிறேன்!

ஏனிந்த மாற்றம் ?
    எந்த வகையில் மாற்றம்?
இல்லை, எப்பொழுது தான் மாறினேன்!

பாஷை புரிந்தாலும் - 
    சில  வார்த்தைகள் மட்டும் -
இன்னும் புரியாத புதிராய்!

மற்றவர் சொன்னபோதெல்லாம்
    மாயையென்று சிரித்தேன்!
 இனி, என்னைக்கண்டும் பலர் சிரிப்பார்!

யாரும் சொன்னபோதும் நம்பவில்லை  -
இன்று உணர்கிறேன்...
தனிமை எத்தனை சுகமென்று!
 தனிமை குளிர்கின்றது...
    சுடவும் செய்கின்றது...!
தனிமையில் சென்று சிரிக்கிறேன் -
    அழவும் செய்கின்றேன்...!

தானாய் சிரித்தவர்களை
    முட்டாள் என்றேன் -
இப்போதெல்லாம்,
   பாதிநேரம் சிரிக்க மட்டுமே செய்கிறேன் --
    -- மீதி நேரம் அழவும் செய்கிறேன்...!
  
நீயின்றி நானில்லை என்று -
    உரக்கக்கூறத் துடிக்கிறேன் நான்!
நீயும் அவனும் சேர்வதெ இல்லையென்று -
    எப்பொழுதோ எழுதிவிட்டான் அவன்!

[தொடரும்...]

No comments:

Post a Comment